2 ம் உலக போர்ல அமெரிக்கா ஜெய்ச்சதுக்கு காரணம் அங்க உள்ள அறிவு செல்வமுன்னு. ஜெர்மனி, ஜப்பான், எல்லாம் அதுக்கு சவால் விட்டாலும் அவங்க அமெரிக்கா அளவுக்கு வரமுடியல
அமெரிக்காவுல எனக்கு பிடிச்ச ஒரே விஷயம். அங்க இருக்க knowledge exposure தான். இதுக்கு காரணம் அங்க கல்விக்கு அரசாங்கம் ராணுவத்துக்கு தர்ற அளவு முக்கியத்துவம் தருது.
நானும் நெனைக்கிறது உண்டு என்னைக்கு நம்ம நாட்ல 100% எழுத்தறிவு வரும்னு ......
விஜய்க்கு, சோனியா காந்திக்கு, கருணாநிதிக்கு (எத்தன தடவ??) டாக்டர் பட்டம் குடுக்குற கல்வி வள்ளல்கள் எல்லாம் அந்த விழாவுக்கு செலவழிச்ச காசுல நாலு கிராமத்து பையன்களுக்கு இலவசமா கல்வி தந்து இருக்கலாம்.
பாரதியார் சொன்னது எல்லாம் இவங்க மண்டயில ஏறாதா
புண்ணியம் கோடி ஆங்கொரு ஏழைக்கு எழுத்தறிவித்தல்
எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டுல இருக்குற தனியார் கல்லூரிகள் பள்ளிகளின் நிர்வாகிகள் நிறைய பேர் பழைய தாதாக்கள், சாராய வியாபாரிகள், அரசியல் செய்ய முடியாத மாஜிக்கள், இந்நாள் அரசியல் தலைவர்கள். ஹும்! இவங்க எங்க நாளைய இளைய சமுதாயத்த உருவாக்க போறாங்க?
அப்துல்கலாம் அய்யா நீங்க கனவு மட்டும்தான் காண முடியும் நடைமுறையில ஒன்னும் நடக்காது
நாம இன்னும் ஏன் அமெரிக்கா காரனுக்கும் அடுத்தநாட்டு காரனுக்கும் அறிவு இருந்தும் வேல செய்றோம்னா இந்த மாதிரி கல்விய வியாபாரம் ஆக்குறவங்க நம்ம மாணவர்கள சுயமா சிந்திக்க விடுறதே இல்லையே.
தேர்வு வெற்றி என்பது தான் அறிவு வளர்ச்சியாக பார்க்க படுகிறது
AIMS, IIT பரவாயில்ல (அதுவும் உலக அளவில நம்ம IISCயே 250 வது இடம்தான் )
அரசாங்க பள்ளியில, கல்லூரியில சேர வேண்டியது தானன்னு வெளக்கமா கேள்வி கேக்குறவங்க அங்க போயி என்ன நிலமைன்னு பார்க்கணும்.
அடிப்படை வசதிகள் இல்ல.....
மாணவர்கள் இருக்கிற அளவு ஆசிரியர்கள் இல்ல....
நானெல்லாம் அரசாங்க பள்ளியில படிச்சுதான் பெரிய நெலமைக்கு வந்தேன்னு சொல்ற புண்ணியவான்க எத்தன பேரு தான் புள்ளைய அதுல சேக்குறாங்க???
கொஞ்சமாவது சிந்தியுங்க மக்களே
ராணுவத்துக்கு செலவழிக்கிற அளவுல பாதியாவது கல்விக்கும் செலவழிக்க அரசாங்கம் முன்வரனும். இவங்க படிச்சு முன்னேறிட்டா நம்ம பொழப்பு போய்ரும்னு நெனைக்கிற அரசியல்வதிங்களுக்கு இந்த தேர்தல்ல என்ன செய்ய போறீங்க ?????
------மார்க்கண்டன்